Tuesday, 20 December 2011

தூண்டிலில் விழுந்த தூரல்



ஆகாயமும் மழையும் 

எனக்கும் 

பிரமிப்பூட்டுபவைதான்..

அதை வருணித்து எழுத 

வார்த்தைகள் தேடி

மாடியில் மல்லாந்து படுத்து.. 

காதலையும்
 
கழுத்துச் சுழுக்கையும்
 
மறந்து..

வார்த்தைகளுக்குத்
 
தூண்டில் போட்டு..

வெறுமையை 

வெளிக்கொணர்ந்து 

தோற்று..


பேனாவை
 
மூடப் போகையில்

சாரல் வந்தது.. 

சரசரக்க…!!

3 comments:

Anonymous said...

ராயலாத்தான் இருக்கு

சசிகலா said...

சாரல் வந்தது..

சரசரக்க…!!

அருமை .

SD said...

Nice

Post a Comment