Tuesday, 24 January 2012

மீண்டும் சந்திக்க வேண்டும்



பள்ளி நாட்களில் என்னோடு
கைகோர்த்து விளையாடிய சிநேகிதர்கள்..
சோறும், பாலும் தந்ததற்காகத்
தேசிய கீதத்தை உரக்கப்பாடிய பகல்கள்..
தொட்டு விளையாடத்
தெருமுனையில் நின்ற குத்துக்கல்..
மாங்கொட்டை, தெலுக்காய், பம்பரம், கோலி
விளையாடிய மகிழ்ச்சி நேரங்கள்..
ரோட்டில், தெருவில் ஓசையோடு
ஓடிய என் கூந்தவண்டி..
வரிசை பிடித்து சந்தையில்
கஞ்சி வாங்கிக் குடித்த வசந்த நடுப்பகல்..
காலில் மிதிபட்ட காரச் சேவு
என் வாயில் வந்த கனம்..
ஓலை இடுக்கின் வழி
உள்ளே புகுந்து பார்த்த படங்கள்..
உறவுகளை ஒன்று சேர்க்க
வருமானத்தைப் பறிகொடுத்த வருடங்கள்..
நான் குடியாய் அமர
குடியரசு தினத்தில் துன்பத்தைத்
தூக்கிகொண்டு கப்பலேறியது பகல்!!

Tuesday, 10 January 2012

தமிழர் திருநாள்



தமிழகத்தின் திருநாளாம்
தமிழ் மக்களின் நன்நாளாம்!
திக்கெட்டும் பரவட்டும்
தீபஒளி ஏற்றட்டும்!
பாரில் உள்ள மக்களுக்கு

பண்பை விளக்கும் நன்நாளாம்!
புத்தம் புது நெல்மணிகள்
பூத்துக் குலுங்கும் கதிர்மணிகள்!
புதுப் பானை பொங்கலிட்டு
புத்தம் புது ஆடைகட்டி!
தைப்பூசத் திருநாளில்
தழைகளை களைந்து விட்டு!
செங்கரும்பு மஞ்சள் கிழங்கு
செங்கதிரவனுக்குப் படைத்து!
ஏர் பிடிக்கும் உழவனுக்கு
ஏற்றம் உண்டாம் இன்நாளில்!
செய்நன்றி மறவா
மாடுகளுக்கு மஞ்சள் இட்டு!
மாமன் முறைதான் எண்ணி
மஞ்சள் நீரை வாரியிரைத்து!
வீரன் தன் நடை காட்ட
வீதியில் அவிழ்த்து விட்டு!
வீரனுக்கு அழகுதானே
வீழ்த்திட மங்கைதனை!!

Sunday, 8 January 2012

ஞாயிறு



வான் மேகம்

வாரி வழங்கும்

வசந்தத்தை வரவழைத்து

வழங்கிட

வனவில்லை மறைத்து

காலை கதிரவன்

களைப்பின்றி

புத்துணர்ச்சியுடன்

எழுந்து

நீர் அலைகள்

உயிர் விட

நீர் அதன்

ஆனந்தத்தின் வெள்ளத்தின்

நீர் அலைகள் கரையேர

காலை கதிரவனே

இளங் காற்றுக்கு

வீசும் சாமரம்

போன்ற

பனைமரமே!

உன் அழகை

என்னவென்று

வர்ணிப்பது?!!