Tuesday, 10 January 2012

தமிழர் திருநாள்



தமிழகத்தின் திருநாளாம்
தமிழ் மக்களின் நன்நாளாம்!
திக்கெட்டும் பரவட்டும்
தீபஒளி ஏற்றட்டும்!
பாரில் உள்ள மக்களுக்கு

பண்பை விளக்கும் நன்நாளாம்!
புத்தம் புது நெல்மணிகள்
பூத்துக் குலுங்கும் கதிர்மணிகள்!
புதுப் பானை பொங்கலிட்டு
புத்தம் புது ஆடைகட்டி!
தைப்பூசத் திருநாளில்
தழைகளை களைந்து விட்டு!
செங்கரும்பு மஞ்சள் கிழங்கு
செங்கதிரவனுக்குப் படைத்து!
ஏர் பிடிக்கும் உழவனுக்கு
ஏற்றம் உண்டாம் இன்நாளில்!
செய்நன்றி மறவா
மாடுகளுக்கு மஞ்சள் இட்டு!
மாமன் முறைதான் எண்ணி
மஞ்சள் நீரை வாரியிரைத்து!
வீரன் தன் நடை காட்ட
வீதியில் அவிழ்த்து விட்டு!
வீரனுக்கு அழகுதானே
வீழ்த்திட மங்கைதனை!!

2 comments:

மதுரை சரவணன் said...

thamilar thirunaal adv vaalththukkal

தஞ்சை குமணன் said...

பக்காவா இருக்குங்க உங்க கவிதை. நான் பொறுமையாக ஒரு வரி விடாமல் வாசித்தேன். நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாங்க.

Post a Comment