கவிஞன் என்பவன்
கந்தக நெருப்பு
உரசிப் பார்த்தால்
உன்னை சுடுவான்
கவிஞன் என்பவன்
கவின்மிகு தென்றல்
தழுவிப்பார் அவன்
தன்மை புரியும்
கவிஞன் என்பவன்
கனியின் சாறு
சுவைத்துப்பார் அவன்
சூட்சுமம் தெரியும்
கவிஞன் என்பவன்
மல்லிகைத் தோட்டம்
நுகர்ந்துபார் அவன்
வாசம் புரியும்
கவிஞன் என்பவன்
தாய்மையின் வடிவம்
உரசிப்பார் அவன்
உருகிப் போவான்
கவிஞன் என்பவன்
சுதந்திர காற்று
கைக்கும் அடங்கான் எவன்
பைக்கும் அடங்கான்
எந்தக் சிறையும்
காற்றுக்கு இல்லை
காற்றும் கவிஞனும்
ஒரு தாய் பிள்ளை.

1 comment:
O.K...
Post a Comment