உலகின் ஒளியே - எங்கள்
உயிரின் ஒலியே..
உண்மையின் உருவே - எங்கள்
உணர்வின் உணர்வே..
அண்டமும் கண்டமும்
அசைவும் காற்றும்
நீரும் நெருப்பும்
நிலவும் வானும்
உன் அசைவின் ஆக்கம்
உன் இசையின் இயக்கம்
உன் ஜனனமும் மரணமும்
உலகின் தத்துவம்
இரக்கமும் அன்பும்
இருவிழியென உணர்த்தி
இன்பமும் மகிழ்வும்
எங்களுக்களித்து
எம்மைக் காத்திடும் தேவா..
என்றும் உன் நினைவே..
எல்லாம் உன் செயலே..
எந்நாளும் உன்னைப்
போற்றிடுவோம்..
எங்களை ரட்சிப்பாய்
என வேண்டுகிறோம்..!!

No comments:
Post a Comment