ஆகாயமும் மழையும்
எனக்கும்
பிரமிப்பூட்டுபவைதான்..
அதை வருணித்து எழுத
வார்த்தைகள் தேடி
மாடியில் மல்லாந்து படுத்து..
காதலையும்
கழுத்துச் சுழுக்கையும்
மறந்து..
வார்த்தைகளுக்குத்
தூண்டில் போட்டு..
வெறுமையை
வெளிக்கொணர்ந்து
தோற்று..
பேனாவை
மூடப் போகையில்
சாரல் வந்தது..
சரசரக்க…!!
3 comments:
ராயலாத்தான் இருக்கு
சாரல் வந்தது..
சரசரக்க…!!
அருமை .
Nice
Post a Comment