படித்த இலக்கியம்
படிக்காத காவியம்
தொடுத்த மலர்கள்
சூடிய மங்கை
மொட்டுகளின் நாணம்
பூக்களின் சிரிப்பு
வரைந்த ஓவியம்
வரையாத தூரிகை
சிற்பியின் கை வண்ணம்
செதுக்காத சிற்பம்
கோபுரத்தின் தரிசனம்
கும்பாபிசேகம்
மேகத்தின் காவியம்
பூமியின் தலை விரிப்பு
இளம் மங்கையின் நாணம்
இயற்கையின் உயிர்ப்பு
மழைத் தூரலின் நாணம்
மண்ணின் வெள்ளம்
காற்றில் நாணம்
கடல் உள் சீற்றம்
காதலன் நாணம்
கடத்தலின் காணம்
நெருப்பின் நாணம்
நெஞ்சத்தின் பரிதவிப்பு
நீரின் நாணம்
நீங்கா துயரம்
பஞ்ச பூதத்தின் நாணம்
பஞ்ச லோகத்தின் பிரபஞ்சம்
இத்தனையும் படித்த இலக்கியத்தோடு
இன்புற்று ஆசை கொண்டு,
பாசம் கொண்டு, நட்பு கொண்டு,
உள்ளம் கொண்டு, வாழும் மனிதா…..?
இயற்கையை ஏற்றி விட்ட இறைவா…!
உன் மனம் கோனும் போது
அது தான்
சுனாமியா……?
சூறைக்காற்றா…….?
பூமி அதிர்வா……..?
கடல் கொந்தளிப்பா……….?
எரிமலை வெடிப்பா…………?
தீ நெருப்பா…………?
எது என்று சொல்………!
எது என்று சொல்………!
கேட்கிறேன் மௌனமாய்……..
அடங்கி விடு ஆண்மாவாய்…………
இன்னும் கொஞ்சம் இருக்கட்டும்
இந்த பூமி பிரதிபலிக்க……….!
உன் நினைவாய் நாங்கள் இருக்க
இருக்கட்டும் இளம் பிஞ்சுகள்
பிஞ்சுமகன் நோக பிதாமகன்
பிறக்கட்டும் பிள்ளைகளாய்……………
பிறந்த நம் பூமியில்
பூக்கட்டும் புன் முறுவல் பூக்களாய்…….
சிரிக்கட்டும் சிங்கார செந்தமிழாய்
அமுது ஊட்ட தமிழ்தனை தளைக்க
தழைத்து விடுவோம் தமிழகத்தில்
தமிழ் மொழியாய், தமிழ் செழிப்பாய்,
தமிழ் மீது பண்பு, பாசம், பரிவு, கொண்டு
பாடிடுவோம் பாரதி கவிதையாய்
பாரினில் போற்றிடுவோம்!
பாரத்தை வளர்த்திடுவோம்!
வான் புகழ் பாடிடுவோம்!
வாழ்க தமிழ்!!
வளர்க தமிழகம்!!!

1 comment:
ம்.....
Post a Comment